Posts

Showing posts with the label சங்க இலக்கியம்

கபிலர் தந்த அடைகள்

முன்னுரை           குறிஞ்சித் திணையுடன் தன் மனதை முழுவதும் ஒன்றவைத்துப் பெற்ற உணர்வுகளைக் கவிதையாக வடித்தவர் கபிலர். குறிஞ்சித்திணையைக் காட்சிப்படுத்தும் கபிலரது கவித்துவம் குறிஞ்சிப்பாட்டில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது எனச் சொல்வதற்குச் சான்றுகள் தேடவேண்டியதில்லை. குறிஞ்சிப்பாட்டில், தோழியானவள் பாறைமேல் பரப்பிய பூக்களாகக் கபிலர் காட்டியவற்றின் எண்ணிக்கை தொண்ணூற்றொன்பது. அவற்றுள் அவரால் அடைகொடுக்கப்பட்ட பூக்களின் எண்ணிக்கை முபத்திரண்டு. கபிலரால் பூக்களுக்குச் சுட்டப்பட்ட அடைகளை மட்டும் முன்னிறுத்தி விவாதிக்கிறது இக்கட்டுரை.             சங்கப் பனுவல்களின் மொழியமைப்பில் அடைகள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. தலைமக்களும் அவர்தம் உடல் உறுப்புகளும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களும் அணிகலன்கள், இசைக்கருவிகள், படைக்கருவிகள், வாழ்விடப் பொருள்கள் முதலிய செயற்கைப் பொருள்களும் அவை பயின்று வரும் இடங்கள் பலவற்றிலும் அடைபெற்றே வந்துள்ளன. சங்கப் பனுவல்களுள் அடைகள் பரக்கப...

சங்கப் பனுவல்களின் அமைப்பு - செவிலி கூற்றில் அமைந்த பாடல்களை முன்னிறுத்திச் சில குறிப்புகள்

      தமிழ் மொழியின் தொல்பழம் பனுவல்களாக அமைந்துள்ள சங்க இலக்கியங்கள் என்பவை 1. அவை எழுதப்பட்ட காலம், 2. தொகுக்கப்பட்ட காலம், 3. உரை எழுதப்பட்ட காலம், 4. பதிப்பிக்கப்பட்ட காலம் என நான்கு காலகட்டங்களின் தாக்குரவுகளைக் கடந்து நமக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இந்த நான்கு காலகட்டத்திலும் நிலவிய சமூகச் சூழல், அரசியல் சூழல் மற்றும் பண்பாட்டுச் சூழல் என இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் சங்க இலக்கியம் குறித்த முழுமையான புரிதல் சாத்தியப்படாது.      இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல் சங்கப்பனுவல்களை தமிழ்ச் சமூகத்தின் தனிப்பெரும் அடையாளமாகக் கட்டமைத்துக்கொண்டது.  தற்பொழுது இந்திய நடுவணரசால் தமிழ், செம்மொழியாக ஏற்கப்பட்டதற்குப் பின் சங்கப்பனுவல்கள் மீது தமிழ்க்கல்விப்புலத்தில் பரவலாகக் கவனம்குவிக்கப்பட்டுவருகிறது. இவ்வாறான சூழலில் சங்க இலக்கியக் கல்வி என்பது முற்றிலும் மரபான பயிற்றுமுறையைக் கைக்கொண்டதாக அல்லாமல் இருபதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற நவீன சிந்தனை மரபுகளை, அணுகுமுறைகளை உள்வாங்கியதாகவும் அமை...