Posts

Showing posts with the label நூல் அறிமுகம்

நூல் அறிமுகம் - தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுட்தொகைப் பனுவல்கள்

Image
நூல்                :       தமிழ்த் தொகுப்பு மரபு   எட்டுட்தொகைப் பனுவல்கள் ஆசிரியர்         :        சுஜா சுயம்பு வெளியீடு      :        சந்தியா பதிப்பகம், சென்னை. ஆண்டு          :        2016       தமிழ் இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளியாகப் பாட்டும் தொகையும் என அமைந்த சங்கப் பாடல்களின் தொகுப்பு விளங்குகிறது. இத்தொகுப்பு நூல்களில் பாடல்களோடு சம்பந்தப்பட்ட திணை, துறை, கூற்று, பாடினோர், பாடப்பட்டோர், வண்ணம், தூக்கு, பண், பெயர், இசை வகுத்தோர் முதலிய குறிப்புகள் பிற்காலத்தில்தான் அப்பாடல்களோடு இணைக்கப்பட்டன.       சங்கப் பாடல்கள் தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்ட காலத்தில் அவற்றைத் தொகுத்த தொகுப்பாளர்களால் தரப்பட்ட இவ்விளக்கங்கள் குறித்து விவாதிப்பதாக...

சொல்வலை வேட்டுவன் - பா.ரா.சுப்பிரமணியன்

Image
பனுவல் இணைய நூல் அங்காடியில் சொல்வலை வேட்டுவன் நூல் வாங்கிட இங்கே சொடுக்குக புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வரும் சுவைமிகுந்த தொடரைத் தலைப்பாகக் கொண்ட இந்த நூலைத் தேர்ந்த தமிழ் அகராதியியல் அறிஞரும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (முதற்பதிப்பு), மரபுத்தொடர் அகராதி உள்ளிட்டவைகளின் முதன்மைப் பதிப்பாசிரியருமான பா. ரா. சுப்பிரமணியன் அவர்கள் உருவாக்கியுள்ளார். சொற்களுக்கும் அவருக்குமான நெருங்கிய உறவும், நெடுநாள் தொடர்பும் அவர் தன் நூலுக்கு இட்ட தலைப்பின் வழியே புலப்பட்டுவிட்டன. இந்நூல் நாட்டுப்புறவியல் குறித்த கட்டுரைகளையும், அகராதியியல் குறித்து கட்டுரைகளையும், பல்வகை என்னும் தலைப்பில் சில கட்டுரைகளையும் என மொத்தம் 34 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.       நாட்டுப்புறவியல் என்னும் முதல் பகுதியில் நாட்டுப்புற இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் முறையிலும் அவற்றின் தனித்தன்மைகளைக் காட்டும் வகையிலும் எழுதப்பட்டுள்ள 7 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை நூலாசிரியர் தமிழாய்வுலகில் நாட்டுப்புறவியல் என்னும் ஆய்வுத்துறை பெரிதும் அறிமுகமாகாத காலங்களில் எழுதியவை என்பது குறிப்பிடத...

ஈரான் - ஒரு நேரடி அனுபவம் (மர்ஜானே சத்ரபியின் கிராஃபிக் நாவல் குறித்த குறிப்புகள்)

Image
                   பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனித சமூகம் பெற்ற அறிவியல் வளர்ச்சியின் தாக்க மானது நவீனமயப்படுத்தப்பட்ட பல சிந்தனைப் போக்குகளை உற்பத்தி செய்தது. இத்தகுச் சிந்தனைப் போக்குகள் பதிபுத்துறையிலும் விரும்பத்தக்க பல மாற்றங்களைக் கொண்டுவந்தன.  புத்தகம், பத்திரிகை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பு , பதிப்பு , பரவலாக்கம் உள்ளிட்டச் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டி ருந்த சூழலில் தான் இதழ்களில் வெளியான கேலிச்சித்திரங்கள், கருத்துப்படங்கள் உள்ளிட்டவற்றை அடியொற்றி ப் புனைவிலக்கியமும் ஓவியங்களும் இணைந்த வடிவமான சித்திரக்கதை என்னும் வகை தோற்றம்பெற்றது.             1895 - வாக்கில் தனக்குரிய தனித்த வடிவத்தைப் பெற்றுவிட்ட சித்திரக்கதை விரைவில் பரவலான வாசகர்களையும் பெற்றுவிட்டது.  இவ்வரவேற்பை ஒட்டி 1950 - களில் தமிழ்ச் சூழலிலும் சித்திரக்கதை வெளியீட்டு முயற்சிகள் முன்னெடுக்க ப்பட்டன.  புராண க் கதை கள், சாகசக் காட்சிகள்...