சொல்வலை வேட்டுவன் - பா.ரா.சுப்பிரமணியன்
பனுவல் இணைய நூல் அங்காடியில் சொல்வலை வேட்டுவன் நூல் வாங்கிட இங்கே சொடுக்குக புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வரும் சுவைமிகுந்த தொடரைத் தலைப்பாகக் கொண்ட இந்த நூலைத் தேர்ந்த தமிழ் அகராதியியல் அறிஞரும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (முதற்பதிப்பு), மரபுத்தொடர் அகராதி உள்ளிட்டவைகளின் முதன்மைப் பதிப்பாசிரியருமான பா. ரா. சுப்பிரமணியன் அவர்கள் உருவாக்கியுள்ளார். சொற்களுக்கும் அவருக்குமான நெருங்கிய உறவும், நெடுநாள் தொடர்பும் அவர் தன் நூலுக்கு இட்ட தலைப்பின் வழியே புலப்பட்டுவிட்டன. இந்நூல் நாட்டுப்புறவியல் குறித்த கட்டுரைகளையும், அகராதியியல் குறித்து கட்டுரைகளையும், பல்வகை என்னும் தலைப்பில் சில கட்டுரைகளையும் என மொத்தம் 34 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. நாட்டுப்புறவியல் என்னும் முதல் பகுதியில் நாட்டுப்புற இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் முறையிலும் அவற்றின் தனித்தன்மைகளைக் காட்டும் வகையிலும் எழுதப்பட்டுள்ள 7 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை நூலாசிரியர் தமிழாய்வுலகில் நாட்டுப்புறவியல் என்னும் ஆய்வுத்துறை பெரிதும் அறிமுகமாகாத காலங்களில் எழுதியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன்காரணமாகவே